உலகம் மறந்து போகின்ற தருணம்
நீ பதித்த பார்வை
எல்லா திசைகளிலும்
ஒளியூட்டி கொண்டு இருக்கும்
பௌர்ணமி நிலாவை போல்
நினைவுகள் எல்லாம் ஒளி பெறுகிறது
நீ சிரித்த அழகான சிரிப்பில்
நாட்கள் கூட நகர்ந்து விட்டது
ஒரு அதி வேக ரயிலை போல
இறுதியில்
எல்லாம் கற்பனையாக முடிந்து விடுகிறது
இந்த கவிதையை போல
ஒரு சில கணங்களில்
No comments:
Post a Comment