TV

Saturday 3 November 2012

பசி

பசி

வெளியுரின் புதுமையில்
 தொலைந்தது
 கையிலிருந்த காசு
 பூ கூட,
 வீழ்த்தி  விடும் 
பலவீனம்  
சாலையோர பாதையில்
 நடக்கையில்,
வயிற்றின் சூட்டில் வலி 
ஒரு வாய் சோற்றுக்கு 
அலைகின்ற
ஒரு  நாயை  போல 
பழக்கமற்ற மனிதர்களை
பார்த்து
 பரிதவிகிறது 
 வெட்கமற்ற  வயிறு 
 
கண்கள்
கண்ணாமுச்சி
ஆடி கொண்டு இருக்கிறது 
 உடலை 
சாந்தி அடைய
செய்யலாமென்று
தெருவின் ஓரத்தில்  இருந்த குழாயை
திறந்தால்
தண்ணீர் சொட்டுகிறது.
ஒரு துளி பட்டவுடன்
நாக்கு
 தண்ணீர் சொட்டுகிறது
இன்னொரு துளி தண்ணீருக்கு 
 
தனி மனிதனுக்கு
உணவு இல்லையெனில் 
ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி 
ஜகத்தினை அழிக்க வேண்டாம் 
மனிதமற்ற  ஜந்துகளை அழியுங்கள்  என்று
மனதின் அலைகள் ஓடி கொண்டு இருக்க 
   
   
அதி வேக
காற்றடித்து விட்டு  
சிறிது
 பெய்ய துவங்கியது
  வானம்
அதன் கண்ணீரை ..........

No comments:

Post a Comment