காலையின் காற்றை கிழித்து கொண்டு
அதிர்வின் ஒளி கதறியது
அதிக பாரம் ஏற்றிய வண்டியின் நிறுத்தும் சத்தம்
ஒரு மிருகத்தின் குரலை போல
அதனருகே
ரத்த வெள்ளத்தில் ஒரு உடல் துடித்து கொண்டு இருந்தது
அதை பார்த்து கூட தொடங்கிய கூட்டம்
வன்முறையில்
வாகனமும் ஒட்டியையும் அடித்து நொறுக்கினர்.
எங்கிருந்தோ ஒரு குரல்
தண்ணீர் வருது தண்ணீர் வருது
கூடியிருந்த கூட்டமெல்லாம்
சிறிது சிறிதாக குறைய தொடங்கியது
இன்னமும் உடல் மட்டும் துடித்து கொண்டு
மன எடைதராசில் ஒரு பக்கம் மனிதத்தையும்
இன்னொரு பக்கம் தண்ணீரையும் வைத்தால்
அதில் மனிதம் தோற்று விடும்தானே
No comments:
Post a Comment