சில நேரங்களில்
நினைக்க தோன்றுகிறது
தற்கொலை பற்றி
ஒரு அதிகம் பாரம் ஏற்றிய
வாகனத்தை போல
தடுமாறி கொண்டே போகும்
என் நிலையை பார்த்து
வறண்டு விட்ட ஆற்று நீரை போல்
வறண்டு இருக்கு கண்ணீர்
மழையை எதிர் பார்க்கும்
ஒரு விவசாயி போல
நானும் எதிர் பார்க்கிறேன்
கண்ணீரை
அதிலாவது என் பாரம் குறையுமென்று