TV

Monday 25 March 2013

இளமை எனும் என் சதை துண்டுகள் (பெண் மனம் )



வயதுக்கு வந்த நாள் முதல்
தொல்லையின் தொடக்கம்
எங்கும் பார்க்கப்படும்  பார்வையில்
எல்லாம்,என் இதயத்தை        
அவர்களின் கண்களுக்கு காட்டமாலே 
விளையாடுகிறது.இளமை எனும் சதை துண்டு
எங்கோ இருந்து வந்தவன் எழுதிய
வெற்று காதல்  காகிதம்,அதை படித்தவர்கள்
பிறப்பின் தொடக்கத்தில் தேவதை மஹாலட்சுமி  என்று
 கொஞ்சிய உதடுகள்  (பெற்றவர்கள் )கூட
"குடும்ப மானத்தை வாங்காதே எங்கயாவது
கண் காணாத  இடத்துக்கு போயிடு"இன்னும் இன்னும்
உள்  நாக்கின் நீளம்தான் ஒரு சாட்டையாய்
 அனலாக வீசப்பபட்டு அடித்து கொண்டு வரும்  வார்த்தைகள்
வெறுமைக்கு தள்ளுகிறது என்னை    :hmmm:    
 
கூட்டத்தின் நடுவே குழப்பம்தான்
கும்மிருட்டில் மாட்டி கொண்டு அழும்         குழந்தையாய் போல
சுற்றி உள்ளவர்களின்முகமூடியால்,
நல்லவர்களும் கெட்டவர்களும்,ஒரே மாதிரி
குழந்தையாய் கொஞ்சிய அக்கம் பக்கத்தவர்கள்   கூட
 பருவ கால செழிப்பை      :O    நெருஞ்சி முள்ளை போல் குத்துகின்ற
 அவர்கள் பார்வையின் வக்கீரம் 
என் உடலின் சதை  துண்டுக்கு, 
 
இன்னும் வாழ்வு இருக்கு என்று எண்ணி
திருமண வாழ்க்கையில்  வருபவனாவது என்னை
புரிந்து கொள்வன்என்று,
ஏங்கிய காலங்கள் எல்லாம் ஏமாற்றி 
நகைகளையும் என் புன்னகையும் ஒன்றாக சேர்த்து
 அடமானம் வைத்து விட்டாவானாகி விட்டான் என்னவன்.
அடிக்கடி வேட்டையாடபடும் மிருகத்தை போல
 வேட்டையாடபடுகின்றன என் சதை துண்டுகள்
 எதையும் காதில் வாங்க வல்லவன் என்னவன்
தூக்கி எறியப்பட்ட கனவுகளுடனும் 
கசக்கி பிழியும் கரும்பு சாறை போலவும் 
 கண்ணீரின்     :cry2:     இரவுகள் அவனுடன்
பூத்த நிறம் மாறும் கீழே விழும் பூக்களுக்கு 
மிருகத்தனம் மாறுமா மிருகத்தில் இருந்து வந்த மனிதனுக்கு??????