சென்ற வாரம் சமயபுரம் கோவிலுக்கு செல்ல வேண்டி இருந்தது.
சாமி தரிசனம் முடிந்து வரும் பொழுது கோவிலின் நூழை வாயிலில்
சாமி படங்களை விற்று கொண்டு இருந்தார் ஒரு மாற்று திறனாளி
சாமி படங்களை வாங்க எனக்கு விருப்பம் இல்லை
ஏனென்றால் ஏற்கனவே போதுமான சாமி படம் வீ ட்டில் இருக்கு.
எனக்கு அவரை பார்த்தவுடன் இரக்க உணர்வு பற்றி கொண்டு வந்தது.
அவருக்கு எதாவது உதவ வேண்டும் என்று எண்ணி சட்டையில் இருந்து
ஒரு பத்து ரூபாயை எடுத்து அவர் கையில் கொடுத்து வைத்து கொள்ள என்றேன்.
ஆனாலும் அவர் "சார் சாமி படம் இருபது ரூபா சார்"என்று கூறி
சாமி படத்தை குடுத்து மீதி பத்து ரூபாயை வாங்கி கொண்டார்
அந்த மானமுள்ள வியாபாரி
No comments:
Post a Comment