பற்றியெரிந்தது தனிமையின் தவிப்பு
வெளிறிக் கிடக்கிறது வெள்ளை மனம்
கனத்த மௌனத்துடன்
நிலைநிறுத்திப் போகிற நினைவுகள்
பூர்த்திசெய்கிற புலம்பல்களும்
சுற்றத்தில் மனிதரும் இல்லை..
உறக்கம் தொலைத்த விழிகள்
வெகு தந்திரமாகத் திணிக்கிறது
எதையோ நினைத்து அதன் வலிகளில்
வாழ்வின் வழியை சுருக்கி
பிளவுபட்ட மர கீறலை போல் ஆனாலும் எங்கேனும் தோன்றலாம்
வன்முறையிலும் வெளிச்சமாகும் ஒரு இரவு