TV

Tuesday 7 May 2013

வன்முறையாகின்ற வரம்


பற்றியெரிந்தது தனிமையின்  தவிப்பு 
வெளிறிக் கிடக்கிறது  வெள்ளை மனம் 
கனத்த மௌனத்துடன்
நிலைநிறுத்திப் போகிற நினைவுகள் 
பூர்த்திசெய்கிற புலம்பல்களும் 
சுற்றத்தில் மனிதரும் இல்லை..
உறக்கம் தொலைத்த விழிகள்
வெகு தந்திரமாகத் திணிக்கிறது
எதையோ  நினைத்து அதன் வலிகளில்
வாழ்வின் வழியை சுருக்கி 
பிளவுபட்ட மர  கீறலை போல் ஆனாலும் எங்கேனும் தோன்றலாம் 
வன்முறையிலும் வெளிச்சமாகும் ஒரு இரவு