TV

Sunday 30 December 2012

தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்?

இன்றைய இரவின் இறுதியில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் என்ற கலாச்சாரம் ஓன்று இருக்கு.அது வந்து விட்டலே இரவு முழுவதும் விழித்து கொண்டு சுண்ணாம்பில் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று சொல்லி எழுதி வைத்து ரோட்டையே நாற வைத்து பின்பு கைபேசி கையில் எடுத்து   மேமொரியில் இருக்கும் எல்லா எண்ணுக்கும் ஆங்கில் புத்தாண்டு வாழ்த்துக்களை அனுப்பி அந்த நபர்களை தொல்லை செய்தும் ,சரக்கடிக்கும் நண்பர்களும் போதையில் சந்தோஷமான நண்பர்களும் பண்ணும் அலப்பரை தாங்க முடியாதுமணி பனிரெண்டு ஆனவுடன் பெரும் கூச்சல் போட்டு கொண்டும் . போகும் வரும் முன் பின் தெரியாத நபர்கள்களிடம்  எல்லாம் "Happy New Year"  சொல்லி சந்தோஷ கூச்சலில் எல்லாம் மாமன் மச்சான் ஆகி விடுகின்றனர்.டாஸ்மாக் கடைகளில் கொடிகட்டிகப்பறக்கும்  வியாபாரமும் அரை குறை ஆடைகளின்  நடனங்களைத் தவிர வேறு என்னதான் இந்த கொண்டாட்டங்களில் கிடைத்தது?போதையில் இருந்து  இதில் தான் ஆரம்பிக்கும் சில  பழக்கங்களை பற்றி போதையில் சபதம் எடுக்கும் பழக்கம் நண்பர்களின் மத்தியில் இந்த வருட கடைசியில் எல்லா கெட்ட பழக்கங்களையும் விட்டு விடுவேன் என்று சபதம் எடுத்த எனக்கு தெரிந்த ஒரு நபர்,அந்த பழக்கம் வந்த ஆண்டுகளில் அதிகம்தான் ஆகியது.கேட்டால் கவலை யாக இருக்கு அதனால்தான் என்கிறனர்.புகை பிடித்து நூரையிரல் புற்று நோய் வந்து இந்த வருடம் படாத பாடு பட்டு கொண்டு இருக்கிறார் அந்த நபர்.வருடாவருடம் சபதம் செய்த நபர்தான் இவர்.நண்பர்களுக்கு நான் சொல்லுவது என்னவென்றால் சபதம் செய்து தோற்பதை விட நாம் சுய கட்டு பட்டுடன் நம் குடும்பத்தை எண்ணி அந்த பழக்கத்தை விடுவது உத்தமம்.இனி வரும் காலங்களாவது எதாவது மாறுதல் ஏற்பட இருக்குமா பார்போம்.

No comments:

Post a Comment