சாலையோர சிகப்பு விளக்கின் விளம்பில் எல்லாம் ஒரு கூ ட்டம்
கூட்டத்தில் ஒருவனாய் கவனித்து இருக்கிறேன்.
தந்தையின் வயதொத்த மனிதர்களை யும்
வயிற்றின் தேடல்களையும்
பார்க்கிறேன்
விழிகளில் பயங்கள் அவமானங்கள்
உருட்டப்பட்ட தாயங்களை போல்,
தத்தளிக்கிறது முதுமை
கடைசியின் கணம்
சுமைகளை விட கனகனக்கிறது
என்னில்
முதுமைக்கு ஏதேனும் உதவி செய்து இருக்கலாம் என்று?
No comments:
Post a Comment