TV

Sunday 30 December 2012

என் வாழ்வின் இருண்ட தினம்












மருத்துவமனையின் படுக்கையில் 
அம்மாவின் இறுதிமூச்சின் ராகங்கள் 
தன் சுருதியை இழக்க ஆரம்பித்தது 
அம்மாவின் முகம் மிகவும் அழகானதாக 
 மாறி கொண்டே இருந்தது
தன் கொடுமையின் வலியெல்லாம்
 கொஞ்ச கொஞ்சமாக விலக தொடங்கியது 
அம்மாவின் கண்களில் 
தவிப்பு மட்டும் 
அனாதையாக ஆக்கப்பட்ட என்னை பார்த்து, 
லேசாக துடித்து கொண்டு இருந்தது அம்மாவின் இதயம்,
சீரற்ற ரத்த ஓட்டமும் சிதைந்து போன முதுமையின் முனகலும்
அழுத்தப்பட்டும்  உந்தப்பட்டும்  இழுக்கப்பட்டும் 
 ஏப்போதும் வெடித்துவிடும் போல இருந்தது எல்லாம் 
சுடுபடுத்தபட்ட கொதி நீரை போல 
கொதித்து வழிந்து கொண்டு இருந்தது என் கண்ணீர் 
காற்று புகுதலில் வயிற்றின் திறன் வெடிக்கும் அளவு 
  அது உப்பியிருந்தது திடுமென  செயலற்ற திறனில் 
ஒவ்வொரு உறுப்புகளும் நிரந்தர உறக்கம் கொள்ள ஆரம்பித்தன.
விழித்து கொண்ட ஆன்மாவோ  
சொர்கத்தின்  வாசப்படியில் 
காத்து கொண்டு இருந்தது 
தேவர்களின் வரவிற்கு 
சிறிது நேரத்தில் தேவர்களும் வந்து
அழைத்து சென்றன அம்மாவின் ஆன்மாவை அது சிரித்து கொண்டே(ஆன்மா) 
நானோ அழுது கொண்டே ?????????????????????



No comments:

Post a Comment