TV

Tuesday 17 September 2013

உடைபடா உலகம்

என்றுமே எண்ணியதில்லை
இறுக்கி இருக்கும் கயிற்றினை
வர்ணம் பூசி நாகரிக மனிதர்களாய்
மீண்டும் வெளுத்த அம்மணத்திற்காய்
நிதானமிழந்து சிதறி விடக் கூடாதென்று
சுமந்தலைந்த காயங்களுடன்
வாழ்வின் வறட்சியாக
நிராதரவான உணர்வும்
மரங்களின் மௌனமும்
இரண்டும் அங்கேதானிருந்தது
ஒன்றின் மேல் ஒன்றாக
காற்று வரைந்து விட்டு போன
ஓவியமான நெளி அலைகள்
நிரம்பிய நிழல் நிதானமிழந்து
கசந்து வெளியேறும்
அர்த்தங்களின் விரிவாக்கம்
சற்றே அச்சுறுத்தும்.
கதவுகளை மூடிவிட்டு முனகும்
தவறிய அழைப்புகள்
கட்டப்பட்ட கடிவாளங்கள்
உடைபடாத ஒருஅந்தி பொழுது
தூக்கி வீசப்பட்ட முகக்கண்ணாடி
சாயும் இளமஞ்சள் நீர்க்குமிழில் உடைந்தபடி
பிணங்களின் மீதேறியே மீதமாகும் மீதம்

No comments:

Post a Comment