TV

Wednesday 20 November 2013

தொண்டைக்குள் முள்ளாய் ஒரு இனிப்பு ...




கசகசத்து வழியும் நீர்த்திவலைகள்..
எது எப்படியிருப்பினும்,கிடைக்கப் பெறும்
நீண்டு கொண்டிருக்கும்
பதில்கள் எப்போதும்...

இருட்டு வேளையில்வானம்
பார்ப்பதற்கு பருவப் பெண்ணின் மிச்சமாய்.
யாவரின் தேடல் சுவாசமில்லா
பனியின் திராட்டம்!

தலையசைப்புகாய் காத்திருப்பும்
சலனப்பட்டு எழுந்துவிட
நிசப்தமான தூக்கம் இல்லா
பின்னலிடப்படும் பாதச் சுவடுகள்
உணர்வுப் பிழம்புகளை எல்லாமே
பொய்யாகிவிட்ட போர்க்களம்
அவசியமற்றதாக எதை சாதிக்கப்போகிறது?

தேய்தலுக்கு உட்படவும் இல்லை
உதட்டை இளிக்கும் புன்னகைகளிலும்
எத்தனையோ சமாதானங்களை சொன்ன
மூகமுடி வக்கிரங்கள்.
எல்லார் முகத்திலும் இறப்பு
இழுத்து, மூடப்பட்ட போர்வைகள்
.மனிதர்களைத் தேடியே
தொலைந்த தருணங்களில்
எப்பொழுது நிகழும் தியானம்...

அபிப்பிராயமின்றி இயல்பிற்கு
எதிராய் தனிமையின் நீளம்
இருள் சூழ்ந்த அதே குரூரம்
வறண்டு பாலையென
அமிலத்துளிகளில் தீர்ந்த சொற்கள்
தொலைந்து விட்ட இடத்தில் பதிந்திருக்கக்கூடும்.
ஏதேனும் பகுதியொன்றில் பிம்பமாய்

No comments:

Post a Comment