மீதம் எல்லாம் மீதியாகி நினைவுகளற்ற
இலையுதிர் காலத்தின் வெறுமையை
மொட்டை மரங்கள் சொல்கிறது
அதன் கொடுமையை,
ஊமையான உலகம்
பயங்கரமான வெற்று இடத்தில
ரசித்தபடியே
படுக்கை மீது இருக்கும்
காயம்பட்ட உருவத்தின் நிழல் மட்டும்தான்
இனிக்க இனிக்க இழைக்கப்பட்டபொய்
பாறை போல் கண கணக்கிறது
சிறகுகள் ஒடிக்கப்பட்டு
பருவத்தின் பலன்
யோசித்தலில்
ஒளியும் நட்ச்சத்திரம்
வட்டம் இடும் விட்டில் பூச்சி
சந்தித்தை போன்று
மரணித்து போகிறது
மைத்துளி.......
No comments:
Post a Comment