TV

Thursday 3 January 2013

அம்மா






அம்மாவின் கை பிடித்து 
நடைக்கையிலே 
ஆனந்தம்தான் 
திருவிழா கூ ட்டங்களில் நடுவே 
நச்சரித்து வாங்கிய மிட்டாய்களும் ,
ஒரு ருபாய் ஐஸ்கிரீம் 
அடி கொடுத்து கூட்டி போன பள்ளிக் கூடமும் 
எந்த வித இலக்கும் இல்லாத 
இறக்கையற்ற மனம் 
ஆனந்தமாக 
மழையில் நனைந்து 
ஆடிய ஆட்டத்தில் 
ஜலதோஷம் பிடித்து 
மருந்து சாப்பிடுகையில் 
கண்ணில் விழுந்த தூசு போன்று 
கலங்கியது அம்மாவின் கண்ணில் 
ஆனாலும் 
இப்பொழுதும் கை பிடித்து நடக்கிறேன் 
மருத்துவ மனைக்கும் வீ ட்டிற்க்கும்

No comments:

Post a Comment