கருமை நிறம் தூளக்கப்பட்டது
கரிய எண்ணம் துகள் துகளாய்
சிறைபடுத்துகிறது சிறகின்றி
என்னை
பஸ் நிறுத்தங்களின் பாதையை
கடக்கும் பொழுது எல்லாம்
கூட படிக்கும் பையன்களிடம் இருந்த
ஒரு வித அழைப்பு
"கரி பால்ட்டி போகுதடா" என்று,
ஏளன வார்த்தையின் கேலியில்
அதை கேட்டதும் பொங்கி வழியும்,
பாலை போல பொங்குகிறது என் கனத்த இதயம்
ஒளியை தேடும் மனிதர்களின் மத்தியில்
இருளையே துணையாக்கி கொண்டேன்.
என் விதவிதமான வண்ண கனவுகளின்,
முடிவில் எங்கும் நிறைந்திருக்கு கறுப்பு
நித்தம் நித்தம் நினைவுகள் கூட
களைப்பிலும் கவலையிலும் .
உருண்டு ஓடுகிறது ஒரு பாறை போல
கருவறையும் கறுப்புதான் கல்லறையும் கறுப்புதான் என்பதை
எத்தனை கவிஞ்சனும் சிந்தனைவாதியும் சொன்னாலும் திருந்தாத
மானிடர்களை எண்ணியும்
என் கறுப்புக்கு பெற்றவர்கள்தான் காரணம் என்று
எண்ணியும் ,அறிவில்லமால்
அவர்களை திட்டி கொண்டு யாரும் பாரவண்ணம்
நான் நடக்கையில்
(வெள்ளை வெளிரான)தோல் நோயின்,
தம்பதிகளின் கையில்,
களையான ஒரு குழந்தை என்னை போல
No comments:
Post a Comment