நரம்பு திசுக்களில்
திசைகள் அறியா பறவை போல்
ஒளிந்து கொள்கிறது கவிதை
அதிகாலை
ரோஜாவின் மீதுள்ள பனியும்
நெடுநேர இரவின் அணைக்கப்படா
வீதி விளக்கின் வெப்பத்தையும்
பார்கிறது
பெரும் சுவாசத்தோடு
சோப்பு குமிழியை போல் வட்டமிடுகிறது
காற்றின் அசைவில் அது உடைந்து அழுகிறது
ஆனாலும்
மின்சாரமற்ற
வீட்டின் விரிசல்களுக்கிடையே
வந்து விழும்
நிலாவின் ஒளியை போல
அழகாக விழுகிறது
வார்த்தை
சில வரிகளில்
No comments:
Post a Comment