TV

Tuesday 15 January 2013

குழந்தைகளின் எதிர்காலம் (கட்டுரை )




உலகம் குழந்தையாக இருக்கவே விரும்புகிறது.ஏதுமற்ற தன்மையில் ஆனால் குழந்தைகள் அப்படி இல்லை,வளர்ந்து கொண்டே போகின்றன.ஒரு குழந்தை தான் பெரியவனாக (இளைஞ்சனாக) மாற வேண்டும் என்று எண்ணுகிறது .ஆனால்,
பெரியவர்களோ (இளஞ்சனோ )குழந்தையாக வேண்டும் என்று விரும்புகிறான்.இது மனித மனதின் இயற்கை நிலை அப்படிதான்.குழந்தைகளை உற்று கவனித்தால் ஒழுங்காக ஒரு இடத்தில் நிற்க்காமால் கையை ஏதேனும் ஒரு உடல் உறுப்பின் மீது தடவி கொண்டே நோண்டி கொண்டோ இருப்பார்கள்.ஓன்று முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும் குழந்தைகளுக்கு முதலில் தன் உடலைத்தான் தெரியும் அது அன்பிற்கு ஏங்குகிறது.ப்ரைய்டு சொல்கிறார் ஒரு குழந்தை எந்த அளவில் தன் உடலை முழுமையாக தொட்டு புரிந்து கொள்கிறதோ அந்த குழந்தைகள் சில உணர்சிகளுக்கு அடிமையாவது மிக மிக குறைவு என்கிறார் .ஆனால் நாம் என்ன செயகிறோம் குழந்தை அதன் உடலை தொடும் பொழுதெல்லாம் ஏதோ பெரிய தவறு செய்து விட்டது போல் அவர்களை பயமுறுத்தி அதிகாரம் செய்ய வேண்டியது இப்படிதான் நாம் செய்கிறோம்.குழந்தைகள் உறுப்புகளை தொடும் பொழுது கருமாம் அப்படியென்று எப்பொழுதும் சொல்லி விடாதீர்கள் அப்படியென்றால் அப்படியே விட்டு விடலாமா?என்று கோப கனலை பெற்றோர்கள் என் மீது திருப்புவது எனக்கு புரிகிறது.குழந்தைகள் ஒரு சில உறுப்புகளை தொடுவது அழுக்கு கூட படிந்து இருக்கும்.அதனை புரிந்து கொள்ள வேண்டும்.அதனை நாம் பார்த்து சுத்தம் செய்து விட வேண்டும்.
ஒவ்வொரு உறுப்பையும் சுத்தமாக வைத்து இருப்பது எப்படி என்று சொல்லி தர வேண்டும்.
பெற்றோர்கள் குழந்தைகளை,குழந்தைகளாக இருக்க எப்பொழுதும் விடுவது இல்லை.இன்று விளையாட்டு என்றால் என்ன என்று கேட்க்கும் அளவுக்கு குழந்தைகள் இருக்கின்றனர்.கார்ட்டூன், பீம் ,டோரா புஜ்ஜி என்ற கார்ட்டூன் டெலிவிசன் தொடர்கள்தான் அவர்கள் விளையாட்டு உலகம் எல்லாம் அதுதான் அவர்களுக்கு,ஓடியாடும் விளையாட்டு எல்லாம் மறக்கப்பட்டு விட்டன.அதற்க்கு காரணம் வெளியே போய் விளையாடினால் ஏதேனும் தொந்தரவுகளை குழந்தைகள் கொண்டு வரலாம்.என்றும் பெற்றவர்கள் நினைக்கலாம். அடுத்து ,படிப்பு எதிலும் அவர்களை அறிவாளி ஆக்கி விட வேண்டும் என்ற முனைப்பு LKG லேயே ஆரம்பித்து விடுகின்றனர்.பரிட்சையில் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும 
எனக்கு தெரிந்த ஒருவரின் மகனை படிப்புதான் முக்கியம் என்று பயிற்றுவித்தர்கள்.அவனும் நன்றாக படித்து முதல் ரேங்கதான் வாங்குவான்.படிப்பை தவிர ஒன்றும் தெரியாது. அவனுக்கு அகில இந்திய பொறியல் தேர்வு நடந்தது. அவனும் எழுதினான்.ஆனால் தேர்வாகவில்லை பதட்டமதான் காரணம் இப்பொழுது அவன் மன நல மருத்துவரிடம் ஆலோசனை பெற்று வருகிறான்.
வாழ்க்கையில் படிப்பு மட்டும் எல்லாம் என்று பயிற்றுவிக்கபட்டவனின் நிலை இதுதான்.பெற்றோர்களின் ஈகோ எப்படியென்றால் தான் சொல்வதை கேட்கும் குழந்தைதான் நல்ல குழந்தை கேட்காத குழந்தை கெட்ட குழந்தை என்று தரம் பிரித்து விடுகிறார்கள்.
எனக்கு ஒரு நகைச்சுவை கதைதான் நியாபகம் வருகிறது.அறிமுகமில்லாத மனிதர்கள் இருவர் சந்தித்து கொண்டனர்.பேருந்து நிலையத்தில்,பேருந்து வர தாமதமாகும் சமயத்தில் இருவரும் பேசி கொண்டனர்.அப்பொழுது ஒருவர் தன் மகனை பற்றி புகார் வாசிக்க ஆரம்பித்தார்.
புகார் வாசிப்பவர்1:இப்பெல்லாம் என் பையன் சொல்லற பேச்சை கேட்கவே மாட்டங்கிறான்.என்ன செய்யறதுன்னு தெரியல உங்க பையன் எப்படி ?
புகார் வாசிப்பவர்2:என் பையன் அப்படியெல்லாம் இல்லை 
புகார் வாசிப்பவர்1:என் பையன் இப்பொழுது பெண்கள் பின்னால் சுற்றுகிறான்.உங்க பையன்? 
புகார் வாசிப்பவர்2:என் பையன் அப்படியெல்லாம் இல்லை பரவாஇல்லை 
புகார் வாசிப்பவர்1:அப்படியா ???என் பையன் சிகரெட் பிடிக்கிறான்.மது அருந்துகிறான்.ஊரில் உள்ள எல்லா கெட்ட பழக்கங்களையும் பழகி விட்டான் தறுதலை. ஆமாம்,உங்கள் பையன்?????
புகார் வாசிப்பவர்2:என் பையன் அப்படியெல்லாம் இல்லை அவன் மிகவும் நல்லவன் 
புகார் வாசிப்பவர்1:அப்படியா ???ஆச்சரியம்தான் இந்த காலத்தில் இப்படி ஒரு பையனா எந்த காலேஜ் படிக்கிறான்?
புகார் வாசிப்பவர்2:காலேஜா அவன் கை குழந்தைங்க 
இப்படிதான் இருக்கிறது பெற்றவர்களின் கவனம் எப்பொழுதும் குறை சொல்லி கொண்டே இருப்பது
இதற்கு என்னதான் தீர்வு,ஒன்றும் செய்ய வேண்டாம்.பெற்றவர்கள் தங்களின் குழந்தைகளிடம் உங்களின் கனவுகளை அவர்களின் மண்டையில் ஏற்றதீ ர்கள்.அப்படி செய்யமால் இருந்தாலே குழந்தைகளுக்கு பாதி பாரம் குறைந்து விடும் அவர்கள் எதில் ஆர்வமாக இருக்கிறார்களோ அதில் அவர்களை ஈடுபட விடுங்கள்.அதற்க்கு உதவுங்கள்.போதும் இதே.       கட்டுரையும்தான் 

நன்றிகள் 
அன்புடன் 
த.நந்தகோபால்

No comments:

Post a Comment